சோமலியா நாட்டில் பிரச்சினை காரணம் வறுமை. ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரச்சினை காரணம் தீவரவாதிகள். திபெத்தில் பிரச்சினை காரணம் ஆக்கிரமிப்பு. கிர்கிஸ்தானில் பிரச்சினை காரணம் இன வேறுபாடு. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை காரணம் இனப் பிரிவு. இப்படி நாடுகளின் பிரச்சினையின் காரணம் தெரியும் பின்னணி புரியும்.
இதுபோல தனிமனிதர்கள், அரசியல் தலைவர்கள் என ஒவ்வொருக்கும் ஒரு பிரச்சினை இருக்கும். அதற்கு தீர்வு கிட்டமாலிருக்கும் தவிர பிரச்சினையின் காரணம் தெரியாமலிருக்காது. ஆனால் அமெரிக்காவில் பாதுகாப்புத்துறையில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அம்மணி. அந்த அம்மணி சந்திக்கும் பிரச்சினை விசித்திரமானது. சி.ஐ.ஏ. ஆபீசரான அந்த அம்மணி மீது அபாண்ட பழி விழுகிறது. அமெரிக்க அதிபரைக் கொல்ல வருகிற ரஷ்ய உளவாளிக்கு உதவியதாக. உயிரைக் கொடுத்தாவது நாட்டு ரகசியத்தைக் காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு பணியாற்றும் உயரிய பதவியில் இருக்கும் அம்மணி மீது இப்படி ஒரு துரோகப் பழி வந்தால்.. என்ன செய்வாள் அந்த அம்மணி....
புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் கொண்டவள் தான் அந்த அம்மணி. ஆனால் இவருக்குள்ள பிரச்சினை யார் இதை செய்கிறார்கள்? ஏன் இதை செய்கிறார்கள்? இதன் பின்னணியில் இருப்பவர் யார்? அல்லது எது? போன்ற கோள்விகள் அவரைக் குடைந்தெடுக்கின்றன.
எல்லாருக்கும் பிரச்சினை வரும். அதற்கு தீர்வு கிடைக்காதே தவிர அதன் தன்மை புரியாமல் இருக்காது. ஆனால் அம்மணிக்கு தன் பிரச்சினையின் தன்மையே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பார்க்கிற எதிர்ப்படுகிற எல்லாருமே தனக்கு எதிராக இருப்பதைப் போல உணர்கிறாள். ஒரு நேர்மையான பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இது எப்படி நேர்ந்தது என்று புரியவில்லை. உலகமே தலைகிழாக சுற்றுவதைப் போல இருக்கிறது.
இனி எந்த விளக்கம் சொல்லவும் நேரமில்லை. அதற்கு அவசியமில்லை. அதை அப்போதுயாரும் நம்பத் தயாராகவும் இல்லை. எனவே சீற்றம் கொண்ட போலீஸ் பிடியிலிருந்து தப்புகிறாள்.
புலி பாயந்து பார்த்திருக்கிறோம். சிங்கம் சீறிப் பார்த்திருக்கிறோம். ஒரு அம்மணி முழுமையான கோபமும் கொந்தளிப்பும் அடைந்து யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த அம்மணி அப்படிக் கொந்தளிக்கிறாள்.
வீரமும் விவேகமும் வெளிப்பட காரியங்கள் செய்கிறாளா... சாகசங்களை கட்டவிழ்த்து விடுகிறாளா.... தன் மீது துரோகப் பட்டம் சுமத்தும் சதியின் நிழலைக் கண்டு பிடிக்கிறாளா.. சந்தேக வலைகளை அறுத்து எறிகிறாளா....
இது சிங்கங்களின் காலம்... சில சிங்கங்கள் கர்ஜிக்க மட்டுமே செய்கின்றன.
சில சிங்கங்கள் தன் குட்டிகளோடு வந்து போராடுகின்றன. சில சிங்கங்கள் வெளி வந்த பின்பே வெற்றிக் கோட்டை தாண்டுகின்றன..
சில சிங்கங்கள் பிறக்கும்போதே வெற்றிக்கான முத்திரையோடு (சோனி பிக்சர்ஸ்) பிறக்கின்றன.
அச்சிங்கம் ஏஞ்சலினா ஜோலியின் "சால்ட்".....
அருமையான பதிவு வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html